விபத்திற்குப் பின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்படவிருந்த முதல் விமானம் இரத்து!

அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி இன்று ( 17) புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்ப சிக்கலால் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இது, கடந்த வாரம் அகமதாபாத்தில் இடம்பெற்ற பேரழிவான விமான விபத்திற்குப் பிறகு, அதே நகரத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த முதலாவது விமானமாகும். எனவே, இதற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

விமானம் புறப்படவிருந்த நேரத்துக்கு முன், பராமரிப்பு பரிசோதனையின் போது Boeing 787-8 Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உடனடியாக விமானம் பயணத்திலிருந்து வாபஸ் பெறப்பட்டது.

இதனால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் இடர்பாடுகளை எதிர்கொண்டனர். ஏராளமான பயணிகள் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து விரக்தியடைந்தனர்.

இதேவேளை, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களைச் சேர்ந்த பல விமானங்கள் அண்மைக்காலமாக தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!