தாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரி மீது விமானி தாக்குதல்!

தாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிக்கும், விமானிக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தாய்லாந்துக்கான பொறுப்பதிகாரி அமிதாப் அந்தனிபிள்ளை மற்றும் UL403 விமானத்தின் விமானி ஆகியோரே இவ்வாறு மோதிக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த விமானத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதாகக் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சோதனை செய்ய முயன்றபோதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

சோதனையின் போது விமானி தன் மீது தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்துக்கான பொறுப்பதிகாரி அமிதாப் அந்தனிபிள்ளை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!