மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா ஆகியோரின் சந்திப்பு பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. காணொளியில், வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட சந்திவெளி பகுதியில் நேற்று (10) நடைபெற்ற எதிர்ப்பு நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
சாணக்கியனின் மட்டக்களப்பு அலுவலகத்தில் ஹிஸ்புல்லா சட்டத்தரணியை சந்திக்க திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பை சாணக்கியன் ஏற்பாடு செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு சமூகத்தில் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
சாணக்கியன் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் இந்த சந்திப்பு தொடர்பாக இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.