🔴 VIDEO கண் திறந்த விநாயகர் சிலை: தமிழர்பகுதியில் நடந்த அதிசயம்

வவுனியா, தோணிக்கல் பகுதியிலுள்ள ஆலடிப் பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் சிலையின் இரு கண் திறந்ததாக வெளியாகியுள்ள தகவல் பக்தர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா தோணிக்கல் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திலுள்ள அமைத்துள்ள பிள்ளையார் சிலையின் கண்களானது மூடிய நிலையிலே காணப்பட்ட நிலையில் நேற்று (14.11) மாலை குறித்த சிலையின் கண்கள் திடீரென திறந்துள்ளது.

பக்தர் ஒருவர் வழிபடச் சென்ற போது குறித்த பிள்ளையார் சிலையில் ஒரு கண் திறந்து இருந்துள்ளது. அதன் பின் இரு கண்களும் திறந்த நிலையில்; பிள்ளையார் காட்சி கொடுத்துள்ளார். அவர் அதனை ஏனையவர்களுக்கு தெரிவித்த நிலையில் பலரும் அவ் அதிசயத்தை பார்க்க சென்றனர். சிறிது நேரம் திறந்து இருந்த கண்கள் பின்னர் வழமையான நிலைக்கு சென்றுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் சுற்றியுள்ளவர்களிற்கு அறிந்த நிலையில், குறித்த அதிசயத்தை காண பொதுமக்கள் அதிகளவில் கோவிலை சூழ்ந்து பிள்ளையாரை பார்த்துச் செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!