கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா ஜனாதிபதி? வெளியான அறிக்கை

ஜனாதிபதி அநுர திசாநாயக்க தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட்டுள்ள 22 முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ளதாக வெரிடே ஆராய்ச்சி நிறுவனம் (VERITE Research) தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் 2024 ஜனாதிபதி தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் ஒரு நிகழ்நிலை கருவியான ‘அநுர மீட்டர்’ அடைப்படையில் இந்த அவதானிப்பு மேற்கொள்ளப்பட்டதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதன்போது, சம்பாதிக்கும்போது செலுத்தும் (PAYE) வரி முறையை திருத்தியமைத்தது மட்டுமே நிறைவேற்றப்பட்ட ஒரே ஒரு வாக்குறுதியாக தெரிவிக்கப்படுகிறது.

வெரிடே ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் manthri.lk வலைத்தளத்தால் இயக்கப்படும் அநுர மீட்டர், பொருளாதார சீர்திருத்தங்கள், நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட உயர் பொது நலன் சார்ந்த பகுதிகளை உள்ளடக்கிய ஜனாதிபதியின் 22 வாக்குறுதிகளை ஆராய்கிறது.

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் வகை தேர்ந்தெடுக்கப்பட்ட 22 வாக்குறுதிகளில் 5% ஐக் குறிக்கிறது, இந்த 22 வாக்குறுதிகளில் 35% ஓரளவு நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் மேலும் 14% தொடங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த 22 வாக்குறுதிகளில் 10 ஆதாவது, 45% பற்றிய புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை என்று அநுர மீட்டர் தெரிவிக்கிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!