தமிழர் பகுதியில் இருந்து பட்டப்படிப்புக்காக வெளிநாடு சென்ற பெண் மாயம்!

முதுகலை படிப்புக்காக வெளிநாடு சென்ற வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விசார் பெண் ஊழியர் ஒருவர், பட்டப்படிப்பை முடித்த பிறகு வேலைக்கு வரவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது, தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

அத்துடன், அவர் வேலைக்கு சமூகமளிக்கவில்லை என்றாலும், பல்கலைக்கழக நிர்வாகம் அவரிடமிருந்து இருநூறு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பிணைமுறி பத்திர மதிப்பை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கணக்காய்வு அலுவலகத்திற்கு தகவல் அளித்த பல்கலைக்கழக நிர்வாகம், நிலுவைத் தொகையை மேலும் செலுத்தாவிட்டால் மாணவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

நிர்வாகம் ஏற்கனவே சுமார் நான்கு மில்லியன் ரூபாய்களை செலுத்திவிட்டதாகவும், நூற்றுநாற்பத்து நான்கு மில்லியனுக்கும் அதிகமான ரூபாய்களை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலகம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!