தமிழர் பகுதியில் இருந்து பட்டப்படிப்புக்காக வெளிநாடு சென்ற பெண் மாயம்!

முதுகலை படிப்புக்காக வெளிநாடு சென்ற வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்விசார் பெண் ஊழியர் ஒருவர், பட்டப்படிப்பை முடித்த பிறகு வேலைக்கு வரவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த விடயமானது, தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கை மூலமாக தெரியவந்துள்ளது.

அத்துடன், அவர் வேலைக்கு சமூகமளிக்கவில்லை என்றாலும், பல்கலைக்கழக நிர்வாகம் அவரிடமிருந்து இருநூறு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பிணைமுறி பத்திர மதிப்பை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கணக்காய்வு அலுவலகத்திற்கு தகவல் அளித்த பல்கலைக்கழக நிர்வாகம், நிலுவைத் தொகையை மேலும் செலுத்தாவிட்டால் மாணவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

நிர்வாகம் ஏற்கனவே சுமார் நான்கு மில்லியன் ரூபாய்களை செலுத்திவிட்டதாகவும், நூற்றுநாற்பத்து நான்கு மில்லியனுக்கும் அதிகமான ரூபாய்களை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, நிலுவைத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலகம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

covid 19
மீண்டும் பரவும் கொவிட்-19 பாதிப்பு: நான்கு பேர் உயிரிழப்பு
Ragitha Rajapaksa
விஜயதாசவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவரினதும் விளக்கமறியல் நீடிப்பு!
jaffna kings
விளையாட்டு ஊழல் குற்றச்சாட்டு: Jaffna கிங்ஸ் அணியின் உரிமையாளர் ஒருவர் கைது!
ramanathan archchuna
அருச்சுனா கூட்டத்தில் வெளியேற்றப்பட்டமை தவறு - ரஜீவன் எம்.பி தெரிவிப்பு!
archchcuna
கிளிநொச்சி கூட்டத்தில் நாகரீகமற்ற முறையில் நடந்துகொண்டது யார்?
Former IGP C.D
ராஜபக்சாக்களின் நிழலாக இருந்த முன்னாள் IGP சி.டி. விக்ரமரத்ன தற்கொ*லை!