முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து: அச்சத்தில் குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்பு சலுகைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், மகிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறி தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் குடியேறியுள்ளார்.

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட வாகனங்களும் ஒப்படைக்கப்படவுள்ளன.

2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு குண்டு துளைக்காத கார் மற்றும் டொயோட்டா லேண்ட் ரோவர் வழங்கப்பட்டன.

குண்டு துளைக்காத கார் பழுதுபார்ப்பதற்காக பல மாதங்களாக மாத்தறையில் வாகனம் பழுது பார்க்கும் இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழுதுபார்ப்பு பணி இன்னும் முடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், வாகனத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்திற்கு மகிந்த தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

லேண்ட் ரோவர் நேற்று தங்காலையிலிருந்து கொழும்புக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குண்டு துளைக்காத வாகனம் இல்லாததால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்து அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் போக்குவரத்துக்காக இரண்டு ஓட்டுநர்கள் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டிருந்தனர்,

மேலும் இந்த இரண்டு நியமனங்களும் நேற்று முன்தினம் முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதா தெரவிக்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

hatton
ஹட்டன் டிக்கோயா இரட்டைக் கொலையாளி இன்று அதிகாலை தப்பியோட்டம்!
arrest
3 வருடங்களுக்கு முன் நடந்த இரட்டைக் கொலை: தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் கைது
jaffna news
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆராய்வு!
arrest
19 நாட்களேயான கைக்குழந்தையை 1 லட்சத்திற்கு விற்க முயன்ற 6 பேர் கைது!
death
கல்விச் சுற்றுலாவில் நேர்ந்த பெரும் சோகம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற கணித ஆசிரியர் உயிரிழப்பு!
iran
தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்!