வெளிநாடொன்றில் இலங்கை மாணவிக்கு சிறை தண்டனை விதிப்பு!

இலங்கையைச் சேர்ந்த 22 வயதுடைய மாணவி ஒருவருக்கு சிங்கப்பூரில் மூன்று மாதங்கள் மற்றும் இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தனது வங்கிக் கணக்கு விவரங்களை மற்றொரு நபருக்கு விற்பனை செய்ததற்காக இந்த தண்டனை நேற்றையதினம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த குற்றத்திற்காக அவருக்கு 1,100 சிங்கப்பூர் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அபராதத்தை செலுத்தத் தவறினால், அவர் மேலதிகமாக மூன்று நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

கணினி துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ், தனது வங்கி உள்நுழைவு விவரங்களை தெரியாத ஒருவருக்கு சட்டவிரோதமாகப் பயன்படுத்துவதற்குத் தூண்டியதற்காக, ராஜாதி ராஜசிங்க மனமேந்திர படபடிலகே விஷ்வா மாதவி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

கடந்த செப்டம்பர் 17 அன்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் கணக்கு கிட்டத்தட்ட 18,000 சிங்கப்பூர் டொலர் மோசடி வருமானத்தை ஈட்டப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!