🔴 VIDEO கிளிநொச்சியில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் இசைக் கொண்டாட்டம் இன்று

கிளிநொச்சியில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்துகொள்ளவுள்ள மாபெரும் இசைக் கொண்டாட்டம் இன்று (ஜூன் 21) மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரனின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் “வன்னியின் இசைத் தென்றல்”
இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஈழத்தின் புகழ்பெற்ற சாந்தன் இசைக் குழுவின் இசையமைப்பில், தென்னிந்திய பிரபல பாடகர்களான சத்தியன், திவாகர், பத்மலதா ஆகியோர் பாடல்களைப் பாடவுள்ளனர்.

அவர்களுடன் ஈழத்தின் புகழ்பெற்ற பாடகர் கோகுலன் உள்ளிட்டவர்களும் பாடல்களைப் பாடி இரசிகர்களை மகிழ்விக்கவுள்ளனர்.

இந்த இசை நிகழ்ச்சி தொடர்பாக யாழ்ப்பாணத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், போரினால் பாதிக்கப்பட்ட மக்களை உற்சாகப்படுத்தி, இசையின் மூலம் அவர்களை மகிழ்விக்கும் நோக்கில் இந்த இசை நிகழ்ச்சி இலவசமாக நடத்தப்படுவதாகவும், இசைக் கலைஞர்களைக் கௌரவிக்கவுள்ளதாகவும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் பிரபாலினி பிரபாகரன் தெரிவித்தார்.

youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!