🔴 PHOTO சாமர்த்தியமாக விபத்தை தடுத்த புகையிரத ஓட்டுனர்!

கலபட மற்றும் வட்டவளை இடையே புகையிரத பாதையில், மரம் ஒன்று புகையிரத பாதையில் முறிந்து விழுந்ததால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் புகையிரத ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இதனால் மலையக புகையிரத சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளன.

நேற்று இரவு சுமார் 7.50 மணியளவில், நிலவும் மோசமான வானிலையின் காரணமாக, கலபட – வட்டவளை இடையே மரம் ஒன்று புகையிரத பாதையில் விழுந்துள்ளது.

அந்த மரத்தை தூரத்தில் கண்ட புகையிரத ஓட்டுநர், சாமர்த்தியமாக புகையிரத்தை நிறுத்தியதனால் பயணிகள் உயிர் பிழைத்தனர். பின்னர், ஓட்டுநரின் வழிகாட்டலின்படி பயணிகள் இணைந்து மரத்தை அகற்றி, புகையிரத பாதையை சீர்செய்தனர்.

இதேவேளை சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு புகையிரதம் மீண்டும் பயணத்தைத் தொடங்கியதாக நாவலப்பிட்டி ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Minab 168
“மினாப் 168” விமானம் : தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை நினைவுகூர்ந்த ஈரானியர்கள்!
Thaiyiddi
யாழ். தையிட்டி விகாரை காணியை உரிமையாளர்களிடம் வழங்க நடவடிக்கை
whatsapp number
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிக்க விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
Vedukkunari Mala
வெடுக்கு நாறியால் மீண்டும் இனமுரண்பாடு உருவாகும் - டக்ளஸ் எச்சரிக்கை!
canada
கனடாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி: மூவர் கைது
ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்