🔴 PHOTO சாமர்த்தியமாக விபத்தை தடுத்த புகையிரத ஓட்டுனர்!

கலபட மற்றும் வட்டவளை இடையே புகையிரத பாதையில், மரம் ஒன்று புகையிரத பாதையில் முறிந்து விழுந்ததால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் புகையிரத ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இதனால் மலையக புகையிரத சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளன.

நேற்று இரவு சுமார் 7.50 மணியளவில், நிலவும் மோசமான வானிலையின் காரணமாக, கலபட – வட்டவளை இடையே மரம் ஒன்று புகையிரத பாதையில் விழுந்துள்ளது.

அந்த மரத்தை தூரத்தில் கண்ட புகையிரத ஓட்டுநர், சாமர்த்தியமாக புகையிரத்தை நிறுத்தியதனால் பயணிகள் உயிர் பிழைத்தனர். பின்னர், ஓட்டுநரின் வழிகாட்டலின்படி பயணிகள் இணைந்து மரத்தை அகற்றி, புகையிரத பாதையை சீர்செய்தனர்.

இதேவேளை சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு புகையிரதம் மீண்டும் பயணத்தைத் தொடங்கியதாக நாவலப்பிட்டி ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு