🔴 PHOTO சாமர்த்தியமாக விபத்தை தடுத்த புகையிரத ஓட்டுனர்!

கலபட மற்றும் வட்டவளை இடையே புகையிரத பாதையில், மரம் ஒன்று புகையிரத பாதையில் முறிந்து விழுந்ததால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. ஆனால் புகையிரத ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இதனால் மலையக புகையிரத சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளன.

நேற்று இரவு சுமார் 7.50 மணியளவில், நிலவும் மோசமான வானிலையின் காரணமாக, கலபட – வட்டவளை இடையே மரம் ஒன்று புகையிரத பாதையில் விழுந்துள்ளது.

அந்த மரத்தை தூரத்தில் கண்ட புகையிரத ஓட்டுநர், சாமர்த்தியமாக புகையிரத்தை நிறுத்தியதனால் பயணிகள் உயிர் பிழைத்தனர். பின்னர், ஓட்டுநரின் வழிகாட்டலின்படி பயணிகள் இணைந்து மரத்தை அகற்றி, புகையிரத பாதையை சீர்செய்தனர்.

இதேவேளை சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு புகையிரதம் மீண்டும் பயணத்தைத் தொடங்கியதாக நாவலப்பிட்டி ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!