திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான உத்தரவை அறிவிப்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

குறித்த உத்தரவானது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாத்தினால் இன்று (30) அறிவிக்கப்படவிருந்தது.

எனினும், இந்த வழக்குத் தொடர்பான உத்தரவு தயாராக இல்லை என மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் அறிவித்தார்.

அதற்கமைய, இந்த உத்தரவு எதிர்வரும் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதியரசர் தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக இந்த உத்தரவைத் தயார் செய்ய முடியுமாயின் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதி, அவ்வாறு நிகழுமாயின் அது குறித்து தரப்பினருக்கு அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

negombo prison
நீர்கொழும்பு சிறை வன்முறைச் சம்பவம்: ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசேட குழு
gotabaya rajapaksa
கைதுக்கு எதிரான கோட்டாபயவின் மனு: உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை
arrest
சென்னையிலிருந்து நாடு கடத்தப்பட்ட குற்றவாளிக்கு போலி கடவுச்சீட்டு: குடிவரவு திணைக்கள பிரதி கட்டுப்பாட்டாளர் கைது!
negombo prison issue
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த 4 அதிகாரிகள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றம்!
negombo prison
மோதல்களினால் இரத்தக் களரியான நீர்கொழும்பு சிறைச்சாலை: கட்டுக்கடங்காத வன்முறையின் பின்னணி
negombo prison
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கர மோதல்: அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு; 50 பேர் வரை காயம்!