ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்:அமெரிக்காவும் பங்கேற்பு?

ஈரான் – இஸ்ரேல் இடையே நீடித்து வரும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், சனிக்கிழமை (28 ) ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் தலைநகர் தெஹரானில் பல்வேறு முக்கிய இடங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்றுவரை ஈரானில் குறைந்தது 30 முக்கிய இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதல்களில் ஈரான் ஜனாதிபதியின் வாசஸ்தலம், புலனாய்வுத்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அரசியல் மற்றும் நிர்வாக கட்டிடங்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், முக்கிய அரசியல் தலைவர்களின் இருப்பிடங்களையும் இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

“The Shield of Judah” என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஈரானில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!