இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதி மற்றும் மன்னார் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் வடமாகாணத்திற்கு உட்பட்ட, வள்ளுவர் விளையாட்டுக்கழகத்தால் அழைக்கப்பட்ட கழகங்களுக்கிடையிலான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, இரண்டாவது நாளாக நேற்று(29) இடம்பெற்றது.

ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ள வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் – 2026 மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மேற்கு வள்ளுவர் விளையாட்டுக்கழக மைதானத்தில் ஆரம்பமாகியது.

மேலும் இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக, மன்னார் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும், மன்னார் நகரசபை உறுப்பினரும், முன்னாள் நகர சபை முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் (ஜெராட்) அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
