“திருகோணமலையிலுள்ள விகாரை முறையாக பதிவு செய்யப்பட்டது” ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அமரபுர மகா நிக்காயவின் தலைமை நாயக்க தேரர் கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி தேரர் ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை 1951 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதாகவும், குறித்த விகாரை முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் விகாரை அமைந்துள்ள காணியின் உரிமை அப்போதைய ஜனாதிபதியால் வழங்கப்பட்ட மானியப்பத்திரத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருகோணமலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவம் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டும் எனவும் அமரபுர மகாநிக்காயவின் தலைமை தேரர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் உடனடியாக ஆராயுமாறும் தலைமை தேரரால் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!