பொலன்னறுவையில் பக்தர்களுடன் விபத்தில் சிக்கிய பேருந்து: 12 பேர் காயம்

பொலன்னறுவை – சோமாவதிய பிரதான வீதியின் சுங்காவில மற்றும் சோமாவதிய ஆகிய பகுதிகளுக்கு இடையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய பகுதிகளில் இருந்து ஒரு குழுவினரை ஏற்றிக்கொண்டு சோமாவதிய புனித பூமியை நோக்கி பேருந்து பயணித்துக்கொண்டிருந்தது.

விபத்தின் போது பேருந்தில் 24 பேர் பயணித்துள்ளனர்.

பேருந்திற்குள் சிக்கியிருந்தவர்களை கந்தகாடு இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் புலஸ்திபுர பொலிஸார் இணைந்து மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

காயமடைந்தவர்களில் 8 பேர் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையிலும், ஏனைய நால்வர் புலஸ்திபுர பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இந்த விபத்துக்குக் காரணம் என விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் புலஸ்திபுர பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!
jaffna university
சிங்கள மயமாக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழகம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
benjamin netanyahu
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!
anura
அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!
bank
வங்கிகளின் புதிய நேரக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு: இலங்கை வங்கிகள் சங்கம்
sathosa
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!