கிளிநொச்சி, தர்மபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த இளைஞர்கள் 19 மற்றும் 18 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
வீதியில் சென்று கொண்டிருந்த கனரக வாகனத்தின் மீது பின்னால் சென்ற உந்துருளி மோதி விபத்துக்குள்ளானது.
உயிரிழந்த இரு இளைஞர்களின் உடலங்களும் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
