தோணி கவிழ்ந்து விபத்து: தாமரை பறிக்கச் சென்ற 4 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச்சென்ற நான்குபாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மாணவர்கள் 5 பேர் மலர்களைப் பறிப்பதற்காகத் தோணியில் சென்று கொண்டிருந்த போது, தோணி தலைகீழாகக் கவிழ்ந்ததில் அவர்கள் நீரில் மூழ்கியதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவர்களில் ஒரு மாணவர் மீட்கப்பட்டதுடன், நீரில் மூழ்கிய ஏனைய மாணவர்கள் அனைவரும் வனாத்தவில்லுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் மிக மோசமான நிலையில் இருந்த நான்கு மாணவர்கள் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், அவர்கள் அங்கு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் அப்பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவர்கள் ஆவர்.

இந்த மாணவர்கள் (16) பண்டாரநாயக்கபுர மற்றும் மங்களபுர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இச்சம்பவம் குறித்து வனாத்தவில்லுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!