900 கோடி ரூபாயை மோசடி: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து 900 கோடி ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு தனியார் நிதி நிறுவனங்களின் இரண்டு பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று(16) உத்தரவிட்டார்.

மகேஷ் பிரியந்த அகலகமகே மற்றும் சந்திக்க யசநாத் பண்டார வீரகோன் என்ற இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

அத்துடன் சம்பவத்தின் 10வது சந்தேகநபரான உதய புஷ்பகுமாரவை ரூ.2.5 மில்லியன் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சந்தேகநபர் வெளிநாடு செல்வதைத் தடை செய்த நீதவான், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், அவருக்கு கடவுச்சீட்டு இல்லையாயின் அதற்கான ஆதாரங்களை பிரமாணப் பத்திரம் மூலம் வழங்கவும் உத்தரவிட்டார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணை பிரிவு, இதுபோன்ற மோசடி சம்பவங்கள் தொடர்பாக நீர்கொழும்பு மற்றும் பொலன்னறுவை நீதிமன்றங்களில் இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!