குடும்ப தகராறில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மனைவி – கணவர் கைது!

குளியாப்பிட்டிய – வல்பிடகம பகுதியில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, கணவர் தனது மனைவியை மண்வெட்டியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார் என்று குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வடுமுன்னேகெதர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சடலம் தற்போது குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 43 வயதுடைய அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம், நாட்டின் பல பகுதிகளில் நிலவும் குடும்ப வன்முறைகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!