குடும்ப தகராறில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட மனைவி – கணவர் கைது!

குளியாப்பிட்டிய – வல்பிடகம பகுதியில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, கணவர் தனது மனைவியை மண்வெட்டியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார் என்று குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் வடுமுன்னேகெதர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது சடலம் தற்போது குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 43 வயதுடைய அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம், நாட்டின் பல பகுதிகளில் நிலவும் குடும்ப வன்முறைகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!