🔴 VIDEO கொழும்பிலிருந்து சென்ற கப்பலில் பயங்கர தீவிபத்து – 22 பேரின் நிலை என்ன?

🔥 முக்கிய தகவல்கள்

  • 🌟 கப்பலில் 22 ஊழியர்கள் இருந்த நிலையில், பலரும் கடலில் குதித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • 🌟 4 பேர் மாயமாகி இருப்பதுடன், 5 பேர் காயம் அடைந்துள்ளனர் என்ற தகவலும் வெளியானது.

சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் ‘எம்.வி. வான் ஹய் 503’, கடந்த 7 ஆம் திகதி இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இருந்து கிளம்பியது. சுமார் 270 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் வரும் 10-ந்தேதி மும்பை துறைமுகத்தை சென்றடைய இருந்தது.

இந்நிலையில், இந்த கப்பல் கேரள மாநிலத்தின் கண்ணூர் துறைமுகம் அருகே வந்தபோது, கப்பலில் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து காலை 10.30 மணியளவில் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சுமார் 11 மணியளவில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சூரத்’ கப்பல் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கப்பலில் மொத்தம் 22 பேர் இருந்த நிலையில், 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!