செவ்வந்தியின் தாயார் சிறைச்சாலையில் உயிரிழந்தார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியின் தாயார் சிறையில் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான சந்தேக நபரானஇஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேவேளை, கெஹல்பத்தர பத்மே, அவரது மனைவி மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகியோர் மலேசியாவில் இருந்து தாய்லாந்திற்கு படகு மூலம் தப்பிச் செல்லும்போது கடந்த ஒன்பதாம் திகதி மலேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இலங்கை காவல்துறையும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியது, பின்னர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டவர்களை இலங்கைக்கு அழைத்து வர இரண்டு குழுக்களை அனுப்பியிருந்தது.

எவ்வாறாயினும், கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவரும் மலேசிய பொலிஸ் காவலில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, அவர்களை அழைத்து வரச் சென்ற குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழு நாளை நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

colombo gun shoot
அக்குரேகொட இரட்டை கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்த சந்தேகநபர்கள்!
Rishad Bathiudeen
ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
dfsdfsd
Massive Protest Meeting in Kilinochchi Against Political Retaliation Targeting MP S. Shritharan
central bank of sri lanka
இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
gun shoot colombo
அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
vehicle import
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்!