தண்ணீர்ப் பஞ்சத்தை தவிர்க்க பழைய மின்னஞ்சல்களை Delete செய்யுங்கள்: பிரித்தானியா கோரிக்கை!

பிரித்தானியாவில் தண்ணீர்ப் பஞ்சத்தை தவிர்க்கவேண்டுமா? உங்கள் பழைய மின்னஞ்சல்களை டெலீட் செய்யுங்கள் என வித்தியாசமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது பிரித்தானிய அரசு.

பிரித்தானியா நான்காவது வெப்ப அலையை எதிர்கொண்டுவருகிறது. இங்கிலாந்திலுள்ள ஐந்து இடங்களில் தற்போது வறட்சி நிலவுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தண்ணீர் பாதுகாப்புக்காக மக்கள் தங்கள் பங்கைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்கிறார் தண்ணீர் சுற்றுச்சூழல் இயக்குநரான ஹெலன் வேக்ஹாம்.

குழாயை சரியாக மூடுவது, பழைய மின்னஞ்சல்களை டெலீட் செய்வது போன்ற நீங்கள் செய்யும் சின்னச் சின்ன விடயங்கள் நமது நீர்நிலைகளின் நலனை பாதுகாக்கும் என்கிறார் அவர்.

அதாவது, மின்னஞ்சல்கள், புகைப்படங்கள் ஆகியவை தரவு மையங்களில் (data centers) சேமித்துவைக்கப்படும்.

இந்த தரவு மையங்களை சூடாகாமல் தவிர்க்க, அவற்றை குளிர்ச்சியாக வைக்க அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும்.

ஆகவேதான் தரவு மையங்கள் சூடாகாமல் தவிர்ப்பதற்காக, அவற்றை குளிர்விப்பதற்காக தண்ணீர் வீணாகாமல் தடுப்பதற்காக, பழைய மின்னஞ்சல்களை டெலீட் செய்யுமாறு பிரித்தானிய அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

kovil news
டிஜிட்டல் தீர்த்தம்: கோவில் கருவறையில் தானியங்கி தீர்த்தம் வழங்கும் இயந்திரம்!
trinco issue
திருகோணமலை விகாரை விவகாரம்: ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு
namal
பிரித்தானியாவில் நாமலுக்கு முட்டுக்கட்டை போட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள்!
Akuregoda gun shoot
அக்குரேகொடை இரட்டை கொலை - அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி!
gas issue
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: கடும் சிரமத்தில் நுகர்வோர்
Andrew
பிரித்தானிய மன்னரின் சகோதரர் கைது!