விடுதலைப் புலிகளின் தங்கம் தொடர்பில் சிஐடியினர் வெளியிட்ட தகவல்!

வடக்கில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தங்கப் பொருட்களில் 5,000இற்கும் மேற்பட்ட பொருட்கள் மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை குற்றப் புலனாய்வுத் துறை நேற்று(02) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளது.

அத்துடன், இராணுவத் தலைமையகத்தின் பாதுகாப்புப் பெட்டகங்களில் உள்ள தங்கப் பொருட்களை முறையாக எண்ணுவதற்காக தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்தின் அலுவலகம் தற்காலிகமாக குற்றப் புலனாய்வுத் துறை தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

ஆணையத்தின் உதவியுடன் தங்கப் பொருட்களின் எடை மற்றும் மதிப்பு ஆதாரமாகப் பதிவு செய்யப்படும் என குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி மீட்கப்பட்ட குறித்த தங்கப் பொருட்கள் இராணுவத்தின் காவலில் இருப்பதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய முறைப்பாடளித்திருந்தார்.

இதனையடுத்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தங்கப் பொருட்களை எண்ணி, அவற்றை காவலுக்கு மாற்ற இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!