🔴 VIDEO அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ் மாணவர்!

2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, தமிழ் மொழியில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 194 என்ற அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

இன்று (04) காலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (03) இரவு இணையத்தில் வெளியிடப்பட்டன.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 மையங்களில் நடைபெற்றதுடன், மொத்தம் 307,951 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு மொத்தம் 901 சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி
anura kumara
ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்
jaffna
யாழ். பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
Kapila Chandrasena
கபில சந்திரசேனவின் மரணம்: வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என தகவல்!
QR
எரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
uk
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்