வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை 600,000 லிருந்து 2 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோசல விக்ரமசிங்க கூறுகையில்,

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவு மூலம் வெளிநாடு செல்லும் எந்தவொரு இலங்கை தொழிலாளிக்கும் இந்த இழப்பீடு பொருந்தும்.

ஆகஸ்ட் மாத இறுதி நிலவரப்படி, இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு 5.2 பில்லியன் டாலர்களை அனுப்பியுள்ளனர் என்றும் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு இதுவரை சுமார் 220,000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பணம் அனுப்புவது 7 பில்லியன் டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 7.5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

colombo gun shoot
அக்குரேகொட இரட்டை கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்த சந்தேகநபர்கள்!
Rishad Bathiudeen
ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
dfsdfsd
Massive Protest Meeting in Kilinochchi Against Political Retaliation Targeting MP S. Shritharan
central bank of sri lanka
இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
gun shoot colombo
அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
vehicle import
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்!