பிறந்த நாளன்று பறிபோன இளைஞனின் உயிர்: இலங்கையில் நடந்த சோகம்

இராகலை – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள ஹாவா – எலிய காட்டுச் சந்தியில் நேற்று(21) இரவு அதிவேகமாக வந்த பாரவூர்தி ஒன்று, உந்துருளியில் மோதியதில் உந்துருளி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த உந்துருளி ஓட்டுநர் ஹாவா – எலிய பகுதியைச் சேர்ந்த மானெத் அபூர்வா என்பவர் ஆவார்.

தனது வீட்டிலிருந்து நுவரெலியா நோக்கி உந்துருளியில் சென்று கொண்டிருந்த இளைஞர், காட்டுச் சந்தியிலிருந்து நுவரெலியா நகருக்குள் நுழைந்தபோது, ​​இராகலையிலிருந்து நுவரெலியா நோக்கி வேகமாகச் சென்ற பாரவூர்தி, மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாரவூர்தியின் ஓட்டுநர் சந்தேகத்தின் பேரில் நுவரெலியா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் 21ஆவது பிறந்தநாள் இன்று(22) என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!