மயக்க மருந்தின்றி அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் கவலை

காசா நகரத்தில் இயங்கிவரும் மருத்துவமனைகளில் ஒன்றின் மருத்துவர்கள், இஸ்ரேலிய தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறைவான அல்லது மயக்க மருந்து இன்றிய சூழ்நிலையில் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நாளாந்தம், பாரிய அளவிலான உயிரிழப்புகள் நிகழ்வதாக அல்-ஷிபா மருத்துவமனையில் தன்னார்வத் தொண்டு செய்யும் அவுஸ்திரேலிய மருத்துவர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இதன்போது, தலை துண்டிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணி தாயின் உடலிலிருந்து ஒரு குழந்தை, போராட்டத்திற்கு மத்தியில் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸின் முக்கிய கோட்டை என்று அழைக்கப்படும், காசா நகரத்தை முழுமையாக ஆக்கிரமிக்க தங்கள் தரைவழி தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது.

இஸ்ரேலிய வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களால் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!