இன்று முதல் ஆரம்பமான கட்டுநாயக்க – கொழும்பு இடையேயான விமான சேவை!

கொழும்பு பேர ஏரிக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையில் விமான சேவை இன்று அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பேர ஏரியை விமான தளமாகக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் இந்த விமான சேவை முன்னெடுக்கப்பட உள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்தப் புதிய சேவை சினமன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது.

தொடக்கப் பயணமாக செஸ்னா 208 விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, கொழும்பு சினமன் லேக்சைடு இறங்குதளத்தை சென்றடைந்தது.

இந்த முதல் பயணத்தில், துறைமுக மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதிஅமைச்சர் ஜனிதா ருவான் கொடிதுவாக்கு, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க, சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சுனில் ஜயரத்ன, மற்றும் பல்வேறு சிறப்பு அதிதிகள் பங்கேற்றனர்.

வர்த்தகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு பயணம் செய்வதற்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த சேவை பயனளிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் தரையிறக்கக்கூடிய இலகு ரக விமானங்கள் இந்த சேவைக்காக பயன்படுத்தப்பட உள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!