அரசாங்கத்தின் வசமாகியுள்ள மூவாயிரம் கோடி ரூபா மதிப்புள்ள பாதாள உலக சொத்துக்கள்

2021 மற்றும் 2024 க்கு இடையில் அரசாங்கம் இதுவரை 3902 கோடி ரூபா மதிப்புள்ள பாதாள உலக குற்றவாளிகளின் சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளது.

குறித்த தகவலை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல் கண்காணிப்பாளர் உதய குமார் வுட்லர் வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், 730 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் செயலற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அந்த சொத்துக்களையும் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

இந்நிலையில், முடக்கப்பட்ட சொத்துக்களில் 354 பவுண் தங்கம், 72 கார்கள், 35 சொகுசு வீடுகள், 37 ஏக்கர் நிலம் மற்றும் ரூ. 670 மில்லியன் ரொக்கம் ஆகியவை அடங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!