வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!

பொது மக்கள் பயன்படுத்தும் சிறிய வாகனங்களின் விலைகளைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மானேஜ் தெரிவித்துள்ளார்.

குறைந்த எஞ்சின் திறன் கொண்ட வாகனங்களின் விலையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொது மக்கள் வாங்கக்கூடிய Alto, Wagon R, Yaris, Hustler போன்ற 1000 சிசி வகை வாகனங்களுக்கான வரியைக் குறைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு பொதுவான Wagon R காருக்கு சுமார் 4 மில்லியன் ரூபாய் வரி விதிக்கப்படுகின்றது. சிறிய வாகனம், சராசரி நடுத்தர வர்க்கத்தினரால் வாங்கப்படுகிறது.

இது நல்ல எரிபொருள் பயன்பாட்டை கொண்டுள்ளது. முடிந்தால், அத்தகைய வாகனங்களை பிரபலப்படுத்த வேண்டும் என பிரசாத் மானேஜ் தெரிவித்துள்ளார்.

இயற்கை பேரழிவு காரணமாக வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கான நிபந்தனைகளை தளர்த்துமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேரிடர் காரணமாக மக்களின் பொருளாதார நிலைமை சரிந்துள்ளது. எங்களிடம் விண்ணப்பம் செய்தவர்கள் தாங்கள் இறக்குமதி செய்த வாகனங்களை வாங்க முடியாத நிலையை அடைந்துள்ளனர். 3 மாதங்களுக்கு பின்னர் 3 சதவீத அபராதம் விதிக்கப்படுகிறது.

எனவே, இந்த பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முடிந்தால் இந்த 3 சதவீத வரியை நீக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!