“காவல்துறை அறிவிப்பு” என்ற பெயரில் பரவும் செய்தி போலியானது!

சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகளில் “காவல்துறை அறிவிப்பு” என்ற தலைப்பில் பரவி வரும் செய்தி முற்றிலும் போலியானது என இலங்கை காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

குறிப்பிட்ட செய்தியில் உள்ள உள்ளடக்கங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் காவல்துறையினரால் வெளியிடப்பட்டவை அல்ல, அவை பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடியவை என்பதால், அதனை உத்தியோகபூர்வ அறிவிப்பாக கருத வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளம், காவல்துறை ஊடகப் பிரிவின் ஊடக அறிக்கைகள், உறுதிப்படுத்தப்பட்ட காவல்துறையின் சமூக வலைத்தள பக்கங்கள் ஆகியவற்றில் மட்டுமே வெளியிடப்படும்.

அரசாங்க நிறுவனங்களின் பெயரில் வரும் செய்திகளைப் பகிரும் முன்னர் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உறுதிப்படுத்தப்படாத அல்லது தவறான தகவல்களைப் பரப்புவது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதோடு, பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும்.

நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேண காவல்துறை முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துல்லியமான மற்றும் உடனுக்குடனான தகவல்களுக்கு காவல்துறையின் உத்தியோகபூர்வ தொடர்பாடல் வழிகளை மட்டுமே பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி
anura kumara
ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்
jaffna
யாழ். பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
Kapila Chandrasena
கபில சந்திரசேனவின் மரணம்: வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என தகவல்!
QR
எரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
uk
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்