உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான தகவல்!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பாடத்திற்குரிய செயன்முறைப் பரீட்சைகள் வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகும் எனப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பரீட்சையானது பெப்ரவரி 7ஆம் திகதி முதல் பெப்ரவரி 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 74 பரீட்சை மத்திய நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக இன்று (பெப்ரவரி 2) முதல் அவற்றைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

மாணவர்கள் தமக்குரிய பரீட்சை நிலையம் மற்றும் நேரத்தை அனுமதி அட்டையின் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!
jaffna university
சிங்கள மயமாக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழகம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
benjamin netanyahu
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!
anura
அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!
bank
வங்கிகளின் புதிய நேரக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு: இலங்கை வங்கிகள் சங்கம்
sathosa
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!