உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு வெளியான தகவல்!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிர்முறைமைகள் தொழில்நுட்பவியல் பாடத்திற்குரிய செயன்முறைப் பரீட்சைகள் வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகும் எனப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பரீட்சையானது பெப்ரவரி 7ஆம் திகதி முதல் பெப்ரவரி 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 74 பரீட்சை மத்திய நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக இன்று (பெப்ரவரி 2) முதல் அவற்றைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

மாணவர்கள் தமக்குரிய பரீட்சை நிலையம் மற்றும் நேரத்தை அனுமதி அட்டையின் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!