பொலிஸாரின் உத்தரவை மீறிச்சென்ற வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆந்தாதொல பிரதேசத்தில், பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது இன்று (09) பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

அம்பலாங்கொடை திசை நோக்கிப் பயணித்த சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றினைப் பரிசோதிப்பதற்காக பொலிஸார் நிறுத்துமாறு சைகை செய்தபோது, அந்த லொறி பொலிஸாரின் கட்டளையை மீறி நிறுத்தாமல் முன்னோக்கிச் சென்றுள்ளது.

இதன் போது பொலிஸ் அதிகாரிகள் லொறியைப் பின்தொடர்ந்து சென்று நிறுத்த முயற்சித்த வேளையில், லொறி தொடர்ந்து தப்பியோட முயன்றதால் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த லொறியைப் பரிசோதித்த போது, அதில் 10 பசுக்களும் 4 எருமை மாடுகளும் இருந்துள்ளதுடன், அவற்றில் ஒரு பசு கழுத்து அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

லொறியில் இருந்த இரு சந்தேகநபர்களை 5,200 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் லொறியுடன் பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அக்குரஸ்ஸ மற்றும் பேருவளை பிரதேசங்களைச் சேர்ந்த 42 மற்றும் 46 வயதுடையவர்களாவர்.

லொறியின் சாரதி மற்றும் மற்றுமொரு சந்தேகநபர் தப்பியோடியுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்கு அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!
jaffna university
சிங்கள மயமாக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழகம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
benjamin netanyahu
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!
anura
அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!
bank
வங்கிகளின் புதிய நேரக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு: இலங்கை வங்கிகள் சங்கம்
sathosa
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!