17 ஆம் திகதி அன்று வானில் தோன்றும் அதிசயம்!

வானியல் அதிசயங்களில் ஒன்றான ‘வளைய சூரிய கிரகணம்’ (Annular Solar Eclipse) எதிர்வரும் 17ஆம் திகதி (மாசி அமாவாசை) நிகழவுள்ளது.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் நேர்க்கோட்டில் வரும்போது, அதன் மையப்பகுதியை மட்டும் மறைத்து விளிம்பில் பிரகாசமான ஒளிவட்டத்தை உருவாக்குவதால் இது ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கிரகணம் மதியம் 3.26 மணி முதல் மாலை 7.57 மணி வரை நீடிக்கும்.

இதன்போது சந்திரனைச் சுற்றி சூரியன் ஒரு தங்க வளையமாகத் தெரியும் இந்த அற்புதமான உச்சக் காட்சியை அதிகபட்சமாக 2 நிமிடங்கள் 20 வினாடிகள் வரை காணலாம்.

முழு சூரிய கிரகணத்தைப் போல வானம் முற்றிலும் இருளடையாது; பகல் நேர ஒளி மங்கலாகத் தொடர்ந்தே இருக்கும்.

புவியியல் ரீதியாக இந்த கிரகணம் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே முழுமையாகத் தெரியும்.

அண்டார்டிகா, தென்னாப்பிரிக்கா மற்றும் தெற்கு அர்ஜென்டினா பகுதிகளில் உள்ளவர்கள் மற்றும் தென் பெருங்கடலில் பயணிப்பவர்கள் இதனை நேரில் காணலாம்.

தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் சூரியன் பாதியிலேயே மறைந்து, ‘கடித்த ஆரஞ்சுப் பழம்’ போலக் காட்சியளிக்கும்.

இந்தியாவில் இந்த கிரகணத்தைக் காண முடியாது என்றாலும், வானியல் ரீதியாக இது ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

சூரியன் சந்திரனை விட 400 மடங்கு பெரியது, அதே சமயம் அது பூமியிலிருந்து 400 மடங்கு அதிகத் தொலைவிலும் உள்ளது. இந்தத் துல்லியமான விகிதமே சந்திரன் சூரியனைச் சரியாக மறைக்கக் காரணமாகிறது என விஞ்ஞானிகள் வியக்கின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

fuel
எம்.பி.க்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்!
weather
கடும் வெப்ப அலை தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: புவியியல் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா
war
இந்தியா வரவிருந்த ஈரான் விமானம் மீது அமெரிக்கா அதிரடித் தாக்குதல்
food price
இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
gun shoot
நீர்கொழும்பு பகுதியில் நிறுத்தாமல் சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
Ishara
இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த CID-யின் பொறுப்பதிகாரி எதிராக நடவடிக்கை!