ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற தருணத்தில் தமது கடமையைச் சரிவரச் செய்யத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி ஜிந்துபிட்டி பகுதியில் இனந்தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்தனர்.
