சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பாக, நுகர்வோர் விவகார அதிகார சபை நாடு தழுவிய ரீதியில் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் சில வர்த்தகர்கள் சமையல் எரிவாயு கொள்கலன்களைப் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தகர்களைக் கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய இரண்டு வகையான சமையல் எரிவாயு கொள்கலன்களுக்கும் நாடு முழுவதும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக எரிவாயு கிடைக்காததால், பல பகுதிகளில் உள்ள உணவகங்களும் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
