அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றை நிராகரித்தது: ஈரான் வெளியுறவு அமைச்சகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் “ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை” நடத்தி வருவதாகக் குறிப்பிட்டிருந்த கூற்றை ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடுமையாக நிராகரித்துள்ளது.

உலக சந்தையில் அதிகரித்து வரும் எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்கும், அமெரிக்க இராணுவத் திட்டங்களுக்குக் கால அவகாசத்தைப் பெற்றுக்கொள்வதற்குமே ட்ரம்ப் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதாக ஈரான் அரசாங்கத்துடன் இணைந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிராந்திய பதற்றத்தைத் தணிப்பதற்காக சில நாடுகளினால் முன்வைக்கப்பட்ட சில “ஆலோசனைகள்” மாத்திரமே தற்போது உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ‘மெஹ்ர்’ (Mehr) செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

“இந்த யுத்தத்தைத் தொடங்கிய தரப்பினர் நாங்கள் அல்ல. எனவே, இந்த அனைத்து கோரிக்கைகளும் ஆலோசனைகளும் வொஷிங்டனை நோக்கியே முன்வைக்கப்பட வேண்டும்” என ஈரான் வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!
jaffna university
சிங்கள மயமாக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழகம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
benjamin netanyahu
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!
anura
அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!
bank
வங்கிகளின் புதிய நேரக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு: இலங்கை வங்கிகள் சங்கம்
sathosa
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!