எரிபொருள் விநியோகத்தில் முடிவுக்கு வருகிறதா ‘ஒற்றை மற்றும் இரட்டை’ இலக்க முறைமை?

எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியில் கேள்வியைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வரிசைகளைக் குறைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை – ஒற்றை இலக்க எரிபொருள் விநியோக முறைமையை நீக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருண தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் எதிர்வரும் மே மாதம் இறுதி வரை நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது.

எரிபொருள் கொள்வனவு தொடர்பான அத்தியாவசிய டெண்டர்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் வாரங்களில் நாட்டில் எவ்வித தடையுமின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியில் கேள்வியைக் கட்டுப்படுத்துவதற்காகவும், வரிசைகளைக் குறைப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை – ஒற்றை இலக்க எரிபொருள் விநியோக முறைமையை நீக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

எரிபொருள் நிலையங்களில் வாகன வரிசைகள் தொடர்ந்து குறைந்து, நிலைமை முழுமையாக வழமைக்குத் திரும்பும் பட்சத்தில், இந்த விநியோகக் கட்டுப்பாட்டு முறைமையை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!