இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதி வரை மின்சார உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே கருத்துத் தெரிவிக்கையில்:

தற்போது இலங்கையிடம் உள்ள எரிபொருள் அளவு, நாட்டின் உண்மையான தேவையை விட சுமார் 10% அதிகமாகவே உள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால், அது கையிருப்பு இல்லாததால் அல்ல; மாறாக பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைச் சேமித்து வைப்பதாலும், விநியோகத் தற்காலிகத் தடைகளாலுமே ஏற்படும்.

அத்தியாவசியத் தேவைக்கு மேலதிகமாக எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!