2022 ஆம் ஆண்டு இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமைக்காக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது.

அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது சொந்த நிதியிலிருந்து 75 மில்லியன் ரூபாயை (7.5 கோடி) அரசுக்கு நட்டஈடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஊழல் மோசடியுடன் தொடர்புடைய ஏனைய பிரதிவாதிகள் ஒவ்வொருவரும் தலா 50 மில்லியன் ரூபாயை (5 கோடி) அரசுக்குச் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தொகை அனைத்தும் பிரதிவாதிகளின் தனிப்பட்ட பணத்திலிருந்து செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
