ஈரானின் முக்கிய பெட்ரோலிய வேதிப்பொருள் ஆலையைத் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஈரானில் உள்ள ஒரு பெட்ரோலிய வேதிப்பொருள் ஆலையைத் தாக்கியுள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மேலும், ஈரானிய உள்கட்டமைப்புகளை “முழு பலத்துடன்” தொடர்ந்து தாக்குமாறு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைக்கு (IDF) அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
“கடந்த வாரம் மற்றொரு ஆலையின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, அசலூயேவில் அமைந்துள்ள ஈரானின் மிகப்பெரிய பெட்ரோலிய வேதிப்பொருள் ஆலையை இஸ்ரேலிய பாதுகாப்புப் படை இப்போது கடுமையாகத் தாக்கியுள்ளது,” என்று காட்ஸ் கூறுகிறார்.
“ஈரானின் பெட்ரோலிய வேதிப்பொருள் ஏற்றுமதியில் சுமார் 85 வீதம் பங்களிக்கும் இந்த இரண்டு ஆலைகளும் இப்போது செயலிழக்கச் செய்யப்பட்டு, இயங்கவில்லை,” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
“அசலூயேவில் அமைந்துள்ள இந்த ஆலை, நாட்டின் பெட்ரோலிய வேதிப்பொருட்களில் பாதியை உற்பத்தி செய்தது” என்றும் காட்ஸ் மேலும் கூறுகிறார்.
