ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் உட்பட நான்கு பேருக்கு மரண தண்டனை!

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர் உட்பட நான்கு பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய பிட்டா ஹெம்மாட்டி (Bita Hemmati), அவரது கணவர் மற்றும் மேலும் இருவர் என மொத்தம் நான்கு பேருக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்தத் தீர்ப்புக்குத் தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தன. இந்தத் தண்டனையானது அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என அவை சுட்டிக்காட்டியிருந்தன.

சர்வதேச அமைப்புகளின் அழுத்தங்களையும் மீறி, ஈரான் நீதிமன்றம் இந்த “உறையவைக்கும் தீர்ப்பை” வழங்கியுள்ளது. இதனால் ஈரான் மற்றும் உலக நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளில் மீண்டும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பானது போராட்டங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்தும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!