தாய்லாந்தில் கொடூரம்: 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் மோதி 8 பிக்குகள் பரிதாப பலி!

தாய்லாந்தின் முக்தாஹான் (Mukdahan) மாகாணத்தில், யாத்திரை மேற்கொண்டிருந்த பிக்குகள் குழுவின் மீது 11 வயது சிறுவன் ஓட்டிவந்த பிக்கப் வாகனம் மோதியதில், 8 பிக்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

முக்தாஹான் மாகாணத்தில் உள்ள கோவிலில் இருந்து உபோன் ரட்சதாணி (Ubon Ratchathani) மாகாணத்தில் உள்ள மற்றொரு கோவிலுக்கு, 34 பிக்குகள் மற்றும் 5 பொதுமக்கள் யாத்திரை மேற்கொண்டிருந்தனர்.

இந்தக் குழுவின் மீது, 11 வயது சிறுவன் ஓட்டிவந்த பிக்கப் வாகனம் மோதியதில் 5 பிக்குகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மொத்தம் 22 பிக்குகள் மற்றும் ஒரு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் முக்தாஹான் மாகாண ஆளுநர் வோராயன் புனாரத் தெரிவித்துள்ளார்.

சிறப்புத் தேவைகள் கொண்ட அந்த 11 வயது சிறுவன், தனது வீட்டின் உரிமையாளருக்குத் தெரியாமல் கெப் வாகனத்தை எடுத்துக்கொண்டு சுமார் 10 கிலோமீட்டர் தூரம் ஓட்டி வந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முக்தாஹான் மாகாண காவல்துறைத் தலைவர் மேஜர் ஜெனரல் பைரோஜ் தைபுத்ரா தெரிவித்துள்ளார்.

சிறுவன் கடும் அதிர்ச்சியில் இருப்பதால் அவரிடம் இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை என்றும், விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவ்விதக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறைத் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!