உளவுத்துறை ரகசியங்கள் அம்பலமானால் ஆபத்து: சுரேஷ் சலே விவகாரத்தில் கம்மன்பில எச்சரிக்கை!

அரச புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணினிக்கான கடவுச் சொற்களை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும், நீதிமன்ற உத்தரவுக்கு தாம் மதிப்பளிப்பதாகவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

இந்த நிலையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பித்துள்ள உத்தரவை ஆட்சேபித்து, சுரேஷ் சலேயின் சட்டக் குழுவினர் மேன்முறையீடு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சுரேஷ் சலே, தமது கடவுச் சொற்களை வழங்குவதற்கு ஏன் கட்டாயப்படுத்தக்கூடாது என்பதற்கான 04 காரணங்களை, உதய கம்மன்பில இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, இலங்கையின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், ஒரு சந்தேகநபர் தனக்கு எதிரான விசாரணைக்கு உதவுமாறு கட்டாயப்படுத்தப்பட முடியாது என்பதே முதல் காரணம் என கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

“சந்தேகநபர் தனக்கு எதிரான விசாரணைக்கு உதவ வேண்டிய கடமை இல்லை. அவர் விரும்பினால் மௌனமாக இருக்க அவருக்கு உரிமை உண்டு,” என்று அவர் கூறினார்.

இரண்டாவது காரணமாக, புலனாய்வாளர்களோ அல்லது பொது அதிகாரிகளோ ஒரு சந்தேகநபரை கடவுச்சொற்களை வெளியிடுமாறு வற்புறுத்தவோ, அச்சுறுத்தவோ அல்லது தூண்டவோ கூடாது என்றும், அத்தகைய நடத்தை, முறையற்ற செல்வாக்கிற்கு வழிவகுக்கும் என்றும் உதய கம்மன்பில் குறிப்பிட்டுள்ளார்.

சலேயின் மின்னணு சாதனங்களில், அவர் உளவுத்துறையில் பணியாற்றிய 38 ஆண்டுகளில் திரட்டிய உளவுத்துறை ஆதாரங்கள் தொடர்பான மிகவும் இரகசியமான தகவல்கள் இருக்கலாம் என்பதே 03 ஆவது காரணமாக அவர் கூறியுள்ளார்.

நான்காவது காரணமாக, 2002 ஆம் ஆண்டு மில்லேனியம் நகர சம்பவத்தை உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

“உளவுத் தகவல்கள் அம்பலப்படுத்தப்படும்போது என்ன நடக்கும் என்பதை மில்லேனியம் நகர சம்பவத்தின் கசப்பான அனுபவம் எடுத்துக்காட்டியுள்ளதாகவும், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் தகவல் அளிப்பவர்கள் அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்பட்டதால், உயிரிழப்புகளும் உளவு வலையமைப்புகளின் வீழ்ச்சியும் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சலே தனது கடவுச்சொற்களை வெளியிட மறுப்பதற்கு இதுவே காரணம் எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான எந்தவொரு சவாலும் சட்டரீதியான செயல்முறையின் மூலமே தொடரப்பட வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

iran - us
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை கோரிக்கையை மறுத்தது ஈரான்!
pillayan
பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலை!
petrol price sri lanka
நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்பட்ட எரிபொருள் விலை!
crime
தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை
police
மதுபான நிலைய முற்றுகையின் போது பொலிஸாரைக் கடிக்க 'ரொட்வைலர், ஜெர்மன் ஷெப்பர்ட்' நாய்களை ஏவிவிட்ட பெண்!
jaffna
நாவற்குழியில் வீடு மீது வன்முறை கும்பல் தாக்குதல்: மீட்டர் வட்டி தகராறில் கொடூரம்!