பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு பேருந்தில் ஏற்பட்ட விபரீதம்!

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த சந்தேகநபரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணையில் உள்ள பிரபல பாடசாலையில் ஏழாம் வகுப்பில் படிக்கும் மாணவர், நேற்று (7 ஆம் திகதி) காலை அலுபோமுல்ல பகுதியில் இருந்து பாணந்துறையிலிருந்து இரத்தினபுரி செல்லும் பேருந்தில் ஏறி மதகுருமார்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துள்ளார்.

இதன்போது ரைகம பகுதியில், கருப்பு கால்சட்டை மற்றும் சிவப்பு டி-சர்ட் அணிந்த ஒருவர் முன்பக்க கதவின் ஊடாக பேருந்தில் ஏறிய சிறிது நேரத்தின் பின்னர் சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்துநோய்வாய்ப்பட்ட மாணவர் இதனையடுத்து பாடசாலைக்கு சென்றவுடன் கண் பார்வை மங்கலாகி, தலைச்சுற்றல் மற்றும் சுயநினைவு இழப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டமையினால் உடனடியாக வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் வழங்கப்பட்டு ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பல பொலிஸ் குழுக்கள் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!