🔴 PHOTO ஓமந்தையில் புகையிரதம் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: தாயும் மகளும் படுகாயம்

வவுனியா, ஓமந்தை பறநாட்டாங்கல் பகுதியில் புகையிரதப் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (02.07)  இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஏ9 வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவை ஊடாக பறநாட்டாங்கல் வீதிக்கு ஏற முற்பட்டபோது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

விபத்தையடுத்து குறித்த புகையிரதம் அரைமணிநேரம் தாமதமாகவே கொழும்பு நோக்கி பயணித்தது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு