மின்சார சபை மறுசீரமைப்புத் திட்டம்: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தமையை தொடர்ந்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய திட்டத்தின் கீழ் 6 நிறுவனங்கள் உருவாக்கப்படவுள்ளன. அதன்படி, இந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்காக மாத்திரம் மாதம் ஒன்றுக்கு 180 இலட்சம் ரூபா செலவிடப்படும். 15 இலட்சம் ரூபா செலவை “அதிகம்” எனக் கூறிவிட்டு, 180 இலட்சம் ரூபா செலவை ஏற்க அரசாங்கம் தயாராவது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மின்சார சபையை இரத்து செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடுவதற்கு அமைச்சின் செயலாளர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை அரசாங்கம் தன்னிச்சையாக முன்னெடுத்தால், சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தமையை தொடர்ந்து ஒட்டுமொத்த மின்சார சபை ஊழியர்களும் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்குவார்கள் என அவர் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி
anura kumara
ஜனாதிபதி நாளை மட்டக்களப்பிற்கு விஜயம்: விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரம்
jaffna
யாழ். பொலிஸ் நிலையத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
Kapila Chandrasena
கபில சந்திரசேனவின் மரணம்: வீட்டின் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகவில்லை என தகவல்!
QR
எரிபொருள் QR குறியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
uk
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்