மகாவலி தாழ்நில பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நிலவும் மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாய ஆரம்பித்துள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதனை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அந்த அதிகாரசபை அறிவித்துள்ளது.

மேலும், கலாவெவ வடிநிலத்திற்குட்பட்ட கலாவெவ மற்றும் கந்தளாய் நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாய்ந்து வருவதாகவும், போவதென்ன, இப்பன்கட்டுவ, மொரகஹகந்த மற்றும் களு கங்கை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகபட்ச மட்டத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மாதுரு ஓயா நீர்த்தேக்கமும் அதிகபட்ச நீர்மட்டத்தில் உள்ளதால், அந்த நீர்த்தேக்கமும் விரைவில் வான் பாயக்கூடும் என மகாவலி அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

mano
"மலையகத் தமிழர்களுக்கு காணி இல்லையேல் வட, கிழக்கில் குடியேற்றம்" - மனோ கணேசன்
weather update
விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்
flood
நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு!
japan
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
Ambitiya Thero
அம்பிட்டிய தேரர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
crime
கணவனை தாக்கி கொலை செய்த மனைவி!