அசோக ரன்வல விபத்து வழக்கு :பொலிஸார் கடமை தவறியமை அம்பலம்

முன்னாள் சபாநாயகரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல சம்பந்தப்பட்ட வாகன விபத்து தொடர்பான விசாரணைகளில், கடமை தவறியதாகக் கூறப்படும் சப்புகஸ்கந்த காவல் நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை ஆரம்பிக்குமாறு காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

சப்புகஸ்கந்த காவல் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள், இந்த விபத்து தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின் போது கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் செயற்பட்டதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து முறையான ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்குமாறு காவல்துறை விசேட விசாரணைப் பிரிவிற்கு காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வாகனம் அண்மையில் மோதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்து எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

mano
"மலையகத் தமிழர்களுக்கு காணி இல்லையேல் வட, கிழக்கில் குடியேற்றம்" - மனோ கணேசன்
weather update
விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை: 4 மாவட்டங்களில் மக்கள் வெளியேற்றம்
flood
நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம்: எழுந்துள்ள குற்றச்சாட்டு!
japan
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்:விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை
Ambitiya Thero
அம்பிட்டிய தேரர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
crime
கணவனை தாக்கி கொலை செய்த மனைவி!