தலைநகரில் இறுதிநேரத்தில் முறியடிக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோக முயற்சி!

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள இரவு விடுதியில் பாதாள உலகக் குழுஉறுப்பினர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்த சம்பவம் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று(20) இடம்பெற்றுள்ளது.

குறித்த இடத்தில் கடமையில் இருந்து இரவு விடுதியின் பாதுகாவலர்கள், தாக்குதல்நடத்த வந்தவர்களை தடுத்தமையால் குறித்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் ரி 56 துப்பாக்கியுடன் இரவு நேர விடுதியில் இருந்த ஒருவரை இலக்கு வைக்க முயன்றனர்.

எனினும் இரவு விடுதி பாதுகாப்பு அதிகாரிகளை எதிர்கொண்ட அவர்கள், துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.

அவர்கள் கைவிட்டுச்சென்ற மோட்டார் சைக்கிள் பின்னர் இரவு விடுதி ஊழியர்களால் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Kehelpaththara Pathme
'கெஹெல்பத்தர பத்மே' விவகாரம்: கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபரிடம் விசாரணை!
subramani dog
உகந்தை நோக்கிப் பயணிக்கும் 'சுப்பிரமணி': யோகட், பால் கொடுப்பதைத் தவிர்க்குமாறு கோரிக்கை!
udaya gammanpila
"பிள்ளையான் பல விடயங்களை வெளிப்படுத்தியதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்" - உதய கம்மன்பில
anura go home
"அநுரவை வீட்டிற்குச் செல்லுமாறு கோரி நாடளாவிய ரீதியில் தீப்பந்தப் போராட்டங்கள் ஆரம்பம்!"
Keppapulavu Protest
கேப்பாப்புலவு போராட்டம்: பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் ஆதரவு
bus fare
வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் உயர்வு!